July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கும் ‘சினமன் எயார் விமானங்கள்’

Photo: Cinnamon air/ Facebook

இலங்கையின் பிரதான உள்நாட்டு விமான நிறுவனமான சினமன் எயார், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் தனது விமான நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் காரணமாக இந்த விமான சேவை பல மாதங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், ரத்மலானை விமான நிலையம் மற்றும் கொழும்பு நகரம் ஆகியவற்றிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு (பாசிக்குடா), ஹம்பாந்தோட்டை, தங்காலை, கொக்கலை, கண்டி, காஸ்டில்ரீக், சீகிரியா, யாழ்ப்பாணம், அறுகம்பை, அனுராதபுரம் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுகிறது.

இதனிடையே, விமான நிறுவனம் மிக உயர்ந்த பாதுகாப்பை வழங்க உறுதிபூண்டுள்ளதுடன், அனைத்து பயணிகளும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.