July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கைக் கடலுக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும்”: அமைச்சர் டக்ளஸ்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளால் இலங்கையின் கடல் வளங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இதனால் அத்துமீறும் மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

அண்மையில் இலங்கைக் கடலுக்குள் நுழைந்த 54 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் நல்லிணக்க அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

நீண்ட காலமாக தொடரும் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இந்திய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு ஊக்குவிக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.