July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் கண்டறியப்பட்டால் கைது செய்யப்படுவார்கள்’

தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளமை, இஸ்லாமிய பயங்கரவாத கொள்கையை பரப்புகின்றமை மற்றும் அவர்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றமை போன்ற காரணங்களினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக இலங்கை விவகாரங்களில் கண்காணித்து செயற்பட்டு வருகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் தனிப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் உறுப்பினர்கள் உட்பட 400ற்கும் அதிகமானவர்களின் பெயர்களையும் இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தடைக்கான காரணம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில ஆகியோர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.