June 16, 2025 13:43:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனலைதீவில் புதிய மீன்பிடி படகுத்துறையை மீனவர்களிடம் கையளித்தார் விக்னேஸ்வரன்

யாழ். அனலைதீவு தெற்கில் புனரமைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுத்துறையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அனலைதீவு கடற்தொழிலாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு செயற்குழு என்ற அமைப்பின் நிதியுதவியில் இந்த மீன்பிடி படகுத்துறையை ஆழப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் படகுத்துறையை மீனவர்களிடம் வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் உள்ளூர் மீனவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஆபத்தான கடற்பாறைகள் நிறைந்த இந்தக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதில் மீனவர்கள் அசௌகரியங்களை சந்தித்துவந்தனர்.

இந்தப் படகுத்துறையின் பயனாக இனிவரும் காலங்களில் மீனவர்கள் பாதுகாப்பான முறையில் தொழிலை மேற்கொள்ள முடியும் என்று கடற்தொழில் சங்கத்தின் தலைவர் ஜோன் பொஸ்கோ தெரிவித்தார்.