July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கலாசாரத்தைப் பேண கழிவு எண்ணெய்யை ஊற்றிய நல்லூர் ஆலய நிர்வாகம்!

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையிலேயே தேர்முட்டிப் பகுதியில் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டது என்று ஆலய நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலயத்தின் மீது கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளதாகவும், இது விசமிகள் செயல் எனவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்ட நிலையில் அது குறித்து ஆலய நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதன்படி இது விசமிகள் செயல் என வெளியாகிய செய்தியை மறுக்கும் நல்லூர் கந்த சுவாமி ஆலய நிர்வாகம், இளையோர் தேர்முட்டிப் பகுதியில் வந்து அமர்வதைத் தடுக்கும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டது என விளக்கமளித்துள்ளது.

நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையில் இளையோர் இணை அமர்வதைத் தடுக்க பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் தடுக்க முடியாத நிலையில் கழிவு எண்ணெய்யை ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.