June 14, 2025 2:52:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். கல்வி வலய பாடசாலைகளுக்கு ஒரு வார கால விடுமுறை

யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று நிலைமை அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரிடம் கலந்துரையாடியதன் பின்னர் யாழ். கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று பரவல் காரணமாக யாழ். நகரின் மத்திய பகுதியும், திருநெல்வேலி – வடக்கு பாற்பண்ணை கிராம அலுவலகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசமும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.