July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயுதப் பயிற்சி வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்களை தடுத்துவைத்து விசாரணை!

புத்தளம் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட மதரஸா பாடசாலையொன்றில் சேவையாற்றிய இரண்டு ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய சந்தேக நபர்கள் இருவரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

26 மற்றும் 27 வயதுடைய சிலாபம் மற்றும் மதுரங்குளிய பிரதேசங்களைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் சேவையாற்றி வந்த மதரஸா பாடசாலைக்கு ஈஸ்டர் தாக்குதலின் பிரதான குண்டுதாரி சஹ்ரான் ஹாசீம் வருகை தந்து, மாணவர்களுக்கு மதப் போதனைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.