July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியை முடக்க முடிவு

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் வரையிலும், மின்சார நிலைய பகுதியில் இருந்து கே.கே.எஸ்.வீதியில் வைத்தியசாலை வரையுமான பகுதியும் மற்றும் கே.கே.எஸ் வீதி சத்திரச் சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும் என சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதனால் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் கோட்டைப் பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் மாநகர பாடசாலைகளில் கொரோனா தொற்று உறுதியான மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாள்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது.

மேலும் யாழ். மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மரண கிரிகைகளின் போது 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.