May 24, 2025 0:32:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தின் காடழிப்புக்கு எதிராக கொழும்பில் சஜித் தலைமையில் போராட்டம்; கூட்டமைப்பினரும் பங்கேற்பு

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காடழிப்பை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆரம்பமான இந்த எதிர்ப்புப் பேரணி, விஹாரமகா தேவி பூங்கா வரை முன்னெடுக்கப்பட்டது.

சுற்றாடலுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிவாசிகளும் இந்த பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கைகோர்த்திருந்தனர்.