October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடக்கு- கிழக்கில் ஐநா ஆணையாளரின் அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்’: ஐநாவில் சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கையில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பைக் கட்டுப்படுத்த ஐநா ஆணையாளரின் அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐநா மனித உரிமைகள் பேரவையில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் இலங்கைக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையின் சிங்கள அரசு 72 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் உரிமைகளை மீறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம், இலங்கை மீது பல்வேறு ஐநா பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு இருந்தாலும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் எதனையும் இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் மக்களின் காணி முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.