May 30, 2025 19:06:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காடழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் இடம்பெற்று வரும் காடழிப்பு நடவடிக்கைளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் பத்தரமுல்லை பாராளுமன்ற வீதியில் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்று வரும் காடழிப்பு நடவடிக்கைகள் அரசாங்கத்தின் இயலாமையைக் காட்டுவதாகவும், காடழிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காடழிப்புக்கு எதிராக நாளை கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.