June 17, 2025 9:43:41

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பூண்டுலோயாவில் கழிவுத்தேயிலை களஞ்சியசாலைஅதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு; இருவர் கைது

நுவரெலியா,பூண்டுலோயா கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலையொன்றை தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

இந்த களஞ்சியசாலையிலிருந்து 4 ஆயிரத்து 195 கிலோ கழிவுத் தேயிலையை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், கழிவுத் தேயிலையை குறித்த நிலையத்துக்கு கொண்டுவந்து, தூய தேயிலை என்ற போர்வையில் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலைத் தூளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும்  பூண்டுலோயா பொலிஸாரிடம், விசேட அதிரடிப்படையினர் கையளித்துள்ளனர்.