July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யாரும் எதிர்பார்க்காத புதிய அரசியல் சக்தி ஒன்று கட்டியெழுப்பப்பட்டு வருகிறது’

யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய அரசியல் சக்தியைக் கட்டியெழுப்ப பல கட்சிகள் தம்முடன் இணைந்து தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘யாரும் நம்பாத ஒரு வரலாற்றுக் கூட்டணி உருவாகி வருகிற இந்த சூழ்நிலையில், எதிர்காலத்தில் ஒரு மாகாண சபை தேர்தல் நடைபெறும் போது, நீங்கள் மீண்டும் 69 லட்சம் வாக்குகளை வழங்க எண்ணி உள்ளீர்களா? என எதிர்க்கட்சித் தலைவர் ​​கேள்வி எழுப்பினார்.

நாம் ஆட்சிக்கு வந்திருந்தால் நாடும், நாட்டு மக்களும் பிரகாசித்திருப்பார்கள்.இப்போது நாட்டு மக்கள் தமது பிழையை உணர்ந்துள்ளார்கள்.எதிர்காலத்தில் சிந்தித்து செயற்படும்படி மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.