October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குடும்ப சண்டையை விசாரிக்க சென்ற யாழ். பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் திருநகரில் உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சண்டையை விசாரணை செய்வதற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருநகரில் நேற்றிரவு குடும்ப உறவினர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 119 அவசர பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், விசாரணையை மேற்கொள்ள இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சார்ஜன்ட் ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் மீது, சகோதரர்கள் இருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனையடுத்து திருநகருக்கு பெருமளவு பொலிஸார் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் நாவற்குழி பகுதிக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிகின்றனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.