July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புத்தர் சிலை சேதம்; இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்

குளியாப்பிட்டியவில் புத்தர் சிலைகளை சேதப்படுத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டிய – ரத்மலேவத்த பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு புத்தர் சிலைகள் சிலவற்றுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் இந்திய பிரஜை ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.