July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பசறையில் 200 அடி பள்ளத்தில் விழுந்து பேருந்து விபத்து; 14 பேர் பலி

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை- லுணுகலை பிரதான வீதியின் மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை 6.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பசறை லுணுகலையில் கொழும்பு பகுதிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டவர்கள் பசறை வைத்தியசாலைக்கும், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேநேரம், பதுளை வைத்தியசாலையில் இரத்தத் தட்டப்பாடு நிலவுவதாகவும், இரத்த தானங்களை மேற்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.