May 2, 2025 20:17:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழா

மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலய திருவிழா இன்று இடம்பெற்றது.

கடந்த 9 நாட்கள் நடை பெற்ற நவ நாள் திருப்பலிகளை தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற வெஸ்பர் நற்கருணை வழிபாட்டை அடுத்து நற்கருணை இறையாசீர்,  மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ. விக்டர் சூசை அடிகளாரினால் வழங்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி ஜேசுராஜா அடிகளாரின் நெறிப்படுத்தலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை  தலைமையில் அருட்பணியாளர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலி நிறைவில் புனித சூசையப்பரின் திருச்சுருப ஊர்வலம் நடைபெற்றது.  பின்னர் மன்னார் மறைமாவட்ட ஆயரினால் இறுதி இறையாசீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதன் போது திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.