July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஏப்ரல் முதல் ‘வரையறையற்ற இணைய சேவை’ பொதிகளை அறிமுகப்படுத்த தீர்மானம்

இலங்கையில் 2021 ஏப்ரல் மாதம் முதல் ‘வரையறையற்ற இணைய சேவை’ (அன்லிமிடட்  டேடா) பொதிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணையத்தள பாவனையாளர்களுக்கு வழங்கக் கூடிய இணைய சேவை பொதிகள் தொடர்பான தகவல்களை மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு இணையளத்தள சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அறிவித்திருந்தாக தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி குறித்த நிறுவனங்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இணைய சேவை பொதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் அந்த சேவைகளை பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.