July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் மகிந்தானந்த வாக்குறுதி

யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு தான் ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே உறுதி வழங்கியுள்ளார்.

வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் 17 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பும் போது, அமைச்சர் மகிந்தானந்த சுகாதாரத் தொண்டர்களைச் சந்தித்துள்ளார்.

இதன்போது, சுகாதாரத் தொண்டர்கள் தமது பிரச்சினைகளை அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலின் போது, சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கலந்துரையாட ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

This slideshow requires JavaScript.