July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மக்களை மட்டுமல்ல மாடுகளையும் இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது” : என்கிறார் அனுரகுமார

நாட்டில் மக்களை மட்டுமன்றி மாடுகளையும் இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என்று ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் அனுரகுமார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்யவுள்ளதாக பிரதமர் அறிவித்திருந்த போதும், இன்னும் அந்த அறிவித்தல் செயற்படுத்தப்படாது இருப்பது ஏன் என்று அனுரகுமார கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டில் ஏதேனும் பிரச்சனைகள் வரும் போது இது போன்ற அறிவித்தல்களை விடுத்து பிரச்சனைகளை மூடி மறைப்பதை அரசாங்கம் வழக்கமாக கொண்டிருப்பதாகவும், இதன்படி நாட்டு மக்கள் மாத்திரமன்றி மாடுகளையும் அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போதும் நாட்டில் மக்களின் பிரச்சனைகளை மூடி மறைப்பதற்காக சரத் வீரசேகர ஊடாக பல்வேறு அறிவித்தல்களை அரசாங்கம் வெளியிட்டு வருவதாகவும், அந்த அறிவித்தல்கள் அனைத்தும் இறுதியில் புஷ்வானமாவதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.