July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அசாத் சாலியின் வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட கைத் துப்பாக்கி தொடர்பாக விசாரணை!

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியின் வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை கொள்ளுப்பிட்டி பகுதியில் அசாத் சாலி தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த போது, சீஐடியினர் அவரை கைது செய்துள்ளனர்.

இதன்போது அந்தக் காரை சோதனைனயிட்ட போது, அதிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கி தொடர்பாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சட்டத்திற்கு முரணான வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டுள்ள அசாத் சாலி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.