July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் புர்கா, நிகாபைத் தடை செய்ய அரசாங்கம் தீர்மானிக்கவில்லை’: வெளியுறவு அமைச்சு

இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான முன்மொழிவு மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

புர்கா மற்றும் நிகாப் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் ஊடக அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புர்கா மற்றும் நிகாப் அணிவதற்குத் தடை விதிப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கு அமைவாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கையாகவும் நிகாப் தடை தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி, தேவையான ஆலோசனைகளின் பின்னரே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.