October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பண்டிகைக் காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு இல்லை”

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் சுகாதார கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கையெடுக்காவிட்டால் நாட்டில் மூன்றாவது கொரோனா அலை உருவாகலாம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,கேள்வி எழுப்பப்பட்டதையடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டில் இன்னமும் கொரோனா பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாததால், மக்கள் தமது பயணங்களை குறைத்துக்கொள்வதுடன், சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு, சுகாதார அதிகாரிகள் பயணங்களை கட்டுப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரியிருந்ததாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.