July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் ஏ-9 வீதியை மறித்து போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் இன்றைய தினம் யாழ் – கண்டி பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்தும் 8ஆவது நாளாக அவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதி மற்றும் ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மயக்கமடைந்து விழுந்த நிலையில் உடனடியாக அவர்கள் அம்பியூலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தமக்கான தீர்வு வழங்காத நிலையில் கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

This slideshow requires JavaScript.