July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜெனிவாவில் இலங்கைக்கு நாம் எவ்வித அநீதியையும் இழைக்க மாட்டோம்’: இந்தியா

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு தாம் அநீதி இழைக்கப் போவதில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான அதிகாரப்பற்றற்ற கலந்துரையாடலின் போதே, இந்தியா இதனைத் தெரிவித்துள்ளது.

‘நாம் இலங்கைக்கு எவ்வித அநீதியையும் இழைக்க மாட்டோம்’ என்று இந்திய பிரதிநிதி ஐநா அதிகாரப்பற்றற்ற கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேநேரம், இலங்கை 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பிரிட்டன் தலைமையிலான நாடுகள் ஐநா பேரவையில் முன்வைத்துள்ள தீர்மானத்துக்கு வாக்களிப்பது தொடர்பாக இந்தியா இதுவரையில் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.