July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச நீதியை வலியுறுத்தும் யாழ். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அம்பாறை இளைஞர்களும் ஆதரவு

சர்வதேச நீதியை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் சிலரும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 15 ஆவது நாளாக இன்று தொடர்கின்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மதத் தலைவர்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே, அம்பாறை மாவட்ட இளைஞர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, ஆதரவு வழங்கியுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக, அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் தமிழ் இனத்திற்கு எதிரான இனவழிப்பு என்பவற்றுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தியே இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.