June 12, 2025 11:31:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் மனித உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்’: அம்பிகையின் உண்ணாவிரதத்துக்கு பிரிட்டிஷ் எம்.பி. ஆதரவு

இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று பிரிட்டன் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாம் டார்ரி தெரிவித்துள்ளார்.

லண்டனில் 16 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக வீடியோவொன்றை வெளியிட்டு, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களை மிக உயர்ந்த மட்டத்துக்குக் கொண்டு செல்ல தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தான் பெருமை அடைவதாகவும், இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் அவர்கள் தன்னுடன் அடிக்கடி பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது- வீண் போகவில்லை என்றும் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாம் டார்ரி தெரிவித்துள்ளார்.