
தேசியக் கொடி என்பது ஒரு நாட்டின் அடையாளமாகும், இது முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேசியக் கொடியின் உருவம் பதியப்பட்ட கால் துடைப்பான் மற்றும் பாதணிகளை உலகளாவிய வர்த்தக நிறுவனமொன்று தனது இணையதளத்தில் விளம்பரப்படுத்தியமையால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்தே சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.
சீனாவைத் தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றினால் குறித்த இணையத்தளத்தில் இந்த பொருட்கள் விளம்பரப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இதையடுத்து குறித்த சீன நிறுவனத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையின் வெளிவிவகார செயலாளர் கலாநிதி ஜயனாத் கொலம்பகே சீன தூதரகத்திற்கு அறிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சீனத் தூதரகம், இலங்கை தேசியக் கொடியைப் பொருத்தமற்ற முறையில் விளம்பரப்படுத்தப்பட்டமை குறித்து தாம் கவலை அடைவதாக கூறியுள்ளது.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு நடிவடிக்கை எடுக்கும் படி சீன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
On Flag Mat issue:
National Flags must be fully respected.
Concern has been conveyed for investigation.
Similar products are sold by sellers from various countries on Amazon.
China has been supporting Sri Lanka for its peace, prosperity and dignity for decades.
full text:
pic.twitter.com/sSnOSkp2xP
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) March 12, 2021
இதனிடையே, சீனாவில் உள்ள இலங்கை தூதரகம், இந்த விடயம் குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், சீனாவில் இலங்கையின் தேசியக் கொடியின் உருவத்துடன் எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்வதையும் விற்பதையும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.