July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்துக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வவுனியாவில் ஊர்வலம்

இலங்கையில் இந்துக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று ஊர்வலமொன்று நடத்தப்பட்டுள்ளது.

குருமன்காடு காளிகோயில் முன்றலில் இருந்து, வவுனியா கந்தசுவாமி கோயில் வரையில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.

பசுவதையை தடுத்தல், மதமாற்றத்தை தடுத்தல் உள்ளிட்ட தமது பிரச்சனைகளுக்கு தீர்வுகாண சட்டங்களை கொண்டு வர வேண்டும் எனவும், இந்து மதத்தவர்கள் எந்தவித தடைகளும் இன்றி வழிபாடுகளில் ஈடுபட இடமளிக்கப்பட வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகள் இந்த ஊர்வலத்தின் போது முன்வைக்கப்பட்டன.

இந்த ஊர்வலத்தில் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகன ஊர்தி பவனியும் இடம்பெற்றது.

நல்லை ஆதினத்தின் இரண்டாம் குருமகா சந்நிதானம், அகில இலங்கை இந்து சாசனத்தின் தலைவர் ஐயப்பதாசக் குருக்குள் வேலர் சுவாமிகள், முத்து ஜெயந்திநாத குருக்கள், தமிழருவி சிவகுமாரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.