October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பஸில் ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர்’

“2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கே உள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மீண்டுமொரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. அதனால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போதைக்கு கதைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிடப் போகின்றார்கள் என்பது குறித்து சரியாகக் கூற முடியாது என்ற போதிலும், பஸில் ராஜபக்ஷவுக்கு அந்தத் தகுதி உள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவார் எனவும், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் எனவும் எந்தவொரு நபரும் எதிர்பார்க்கவில்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.