October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனு வாபஸ்

இலங்கை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட விதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய  விடயங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீளப் பெற்றுக்கொள்வதற்கு உயர்நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மனுவில் உள்ள குறைபாடுகளை மனுதாரரான சட்டத்தரணி நாகனந்த கொடித்துவக்கிற்கு சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், அந்த மனுவை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமென்று அவருக்கு அறிவித்துள்ளது.

அத்துடன், மனுவில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து புதிய மனு ஒன்றை தாக்கல் செய்யவும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று  காமினி அமரசேகர, யசந்த கோதாகொட, ஏ.எச்.எம்.டி நவாஸ், குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரட்ன ஆகியோரை உள்ளடக்கிய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்ட போதே மனுவை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.