October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டவிரோதமாக கனடா செல்ல முயற்சித்த 24 பேர் கடற்படையினரால் கைது!

இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 24 பேர் புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி குரக்கன்ஹேன களப்புக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றை  சோதனையிட்ட கடற்படையினர் அதற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த 24 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன்போது படகு ஒன்றின் மூலம் கனடா செல்ல காத்திருந்ததாக அந்த  லொறியில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து 24 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்த லொறியும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 20 ஆண்களும் , ஒரு பெண்ணும் மூன்று சிறுவர்களும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு, யாழ்பாணம், முல்லைத்தீவு,  திருகோணமலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையினரால் கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.