July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் யாழ் – சென்னை விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் நாட்டை வழமைக்கு கொண்டு வரும் வேலைத்திட்டத்திற்கமைய இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான சுற்றுலாத்துறையை விருத்திச் செய்யும் வகையில் இந்த விமான சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இரத்மலானை , யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவைகளையும் விரைவில் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.