![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/03/158640759_3922350711118876_4810606679689361123_o-e1615284027279.jpg?fit=1024%2C714&ssl=1)
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவை இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்கள் சந்திக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திப்பதற்காக சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, அவருடன் செல்பி புகைப்படம் எடுத்திருந்தார்.
இந்நிலையில், அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் ஒழுக்காற்று நிலையத்திற்கு இன்றைய தினம் ரஞ்சன் ராமநாயக்க அழைக்கப்பட்டிருந்தார்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 78 ஆவது பிரிவிற்கமைய, அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, தான் செல்பி புகைப்படம் எடுத்தமை தொடர்பான குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், சிறைக்கு வரும் பார்வையாளர்களை சந்திக்க ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவருடன் புகைப்படம் எடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷனவுக்கு அனுமதி வழங்கியிருந்த சிறைக்காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.