July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; தாய், மகன் படுகாயம்

யாழ்ப்பாணம் – நீர்வேலி சந்திக்கு அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, ‘தனுரொக்கின்’ நண்பன் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதன்போது மகனைக் காப்பாற்ற முயன்ற தாய் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே நேற்றிரவு 8 மணியளவில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்கள், கம்பிகள் கொண்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்னர் வேறொரு வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த தனுரொக் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று முன்னர் குற்றச்சாட்டுக்கள் இருந்த தனுரொக் 2018க்கு பின்னர் வன்முறைகளிலிருந்து விலகியிருந்ததாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணம் – நீர்வேலி சந்திக்கு அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, ‘தனுரொக்கின்’ நண்பன் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதன்போது மகனைக் காப்பாற்ற முயன்ற தாய் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே நேற்றிரவு 8 மணியளவில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்கள், கம்பிகள் கொண்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்னர் வேறொரு வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த தனுரொக் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று முன்னர் குற்றச்சாட்டுக்கள் இருந்த தனுரொக் 2018க்கு பின்னர் வன்முறைகளிலிருந்து விலகியிருந்ததாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.