July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தங்கம் கடத்தினார்களா?: பிடிபட்ட இலங்கை மீனவர்களிடம் தமிழக காவல்துறை விசாரணை

இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியக் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இருவரும் தனுஷ்கோடியை அண்மித்த கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இருவரும் மன்னார் பேசாலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவர்கள் தொடர்பாக தமிழக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள இருவரும் தங்கம் கடத்தலில் ஈடுபட்டனரா எனும் கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.