![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/au.jpg?fit=1000%2C613&ssl=1)
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த தேங்காய் எண்ணெய்க் கொள்கலகன்கள் பல திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த எண்ணெய்க் கொள்கலன்களே இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயன பதார்த்தங்கள் கலக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த மீன்கள் அடங்கிய கொள்கலன்களையும் திருப்பியனுப்ப நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக உணவு நிர்வாகப் பிரிவினரால் அந்த மீன் கொள்கலன்களை ஆராய்ந்த போது, அந்த மீன்களில் பாதரசம் உள்ளிட்ட இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்ததை தொடர்ந்து அவற்றை திருப்பியனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.