July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

12 ஆவது நாளாக அம்பிகை உண்ணாவிரதம்: ‘நீதிக்கான போராட்டம் தொடரும்’

சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாக லண்டனில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அம்பிகை செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது சர்வதேச குற்றவியல் விசாரணையைக் கோரி லண்டனில் வசித்து வரும் பெண் ஆரம்பித்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 12 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து ஒவ்வொருவரிடமும் ஏற்பட்டுள்ள விடுதலை உணர்வின் பின்னால் மாவீரர்கள் உள்ளது தெளிவாகத் தெரிகின்றதாகவும் அம்பிகை செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகள் பிரிட்டன் பாராளுமன்றம் வரை ஒலிப்பதற்கு அனைவரது போராட்டமும் காரணமாக அமைந்ததாகவும், ஒருவரது போராட்டத்தால் இந்த உலகம் திரும்பிப் பார்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இந்த உலகில் இறுதித் தமிழன் இருக்கும் வரை உண்மைக்கும் நீதிக்குமான போராட்டம் தொடரும்’ என்றும் அம்பிகை செல்வகுமார் தெரிவித்துள்ளார்.