July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயிரம் ரூபா: சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கமைய தொழில் அமைச்சரின் செயலாளர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்த பட்ச அடிப்படை சம்பளமாக 900 ரூபா மற்றும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவான 100 ரூபா அடங்கலாக நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டுமென்று வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.