![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/03/20210309_161552.jpg?fit=560%2C300&ssl=1)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்க, இலங்கை பத்திரிகை கவுன்சிலின் முன்பாக இழுத்துச் செல்லப்பட்டு சிறைச்சாலைப் பேருந்தில் ஏற்றப்பட்ட சம்பவத்தின் காணொளியை அவரது பெயரில் இயங்கும் யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.
தனியார் பத்திரிகை ஒன்றுக்கு எதிராக ரஞ்சன் ராமநாயக்க செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பிலுள்ள இலங்கை பத்திரிகை கவுன்சிலுக்கு அவர் இவ்வாறு அழைத்துவரப்பட்டிருந்தார்.
விசாரணைகள் நிறைவடைந்து சிறைச்சாலைப் பேருந்துக்கு திரும்பும் போது, ரஞ்சன் ராமநாயக்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க முயற்சித்தபோது காவலர்களால் தடுக்கப்பட்டு இழுத்துச் சென்று பேருந்தில் ஏற்றப்பட்டார்.
இதன்போது அவர் “நான் கொலை செய்யவில்லை. ஒரு கொலையாளியைப் போன்று நடத்துகிறீர்கள்” என்று கூச்சலிட்டார்.