May 27, 2025 22:32:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அந்நிய செலாவணியை ஈட்டக் கூடிய முறையான திட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை!

அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களைத் முன்னெடுக்குமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் .

எதிர்காலத்தில் இலங்கையில் அந்நிய செலாவணி ஊடாக செயற்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் தலைவர்களுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்ளும்போது அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது குறித்து கவனத்திற்கொண்டு வெற்றிகரமான திட்டங்களை மாத்திரம் செயற்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய பிரதமர், அத்திட்டங்களின் ஊடாக அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார் .