February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு தீர்மானம்!

மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 5, 11 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை இம்மாதம் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை தரம் 1 முதல் 4 வரையான வகுப்புகளையும், தரம் 6 முதல் 10 வரையான வகுப்புகளையும் மற்றும் 12 ஆம்  தர வகுப்பையும்  ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மாகாணம் தவிர்ந்த மற்றைய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அனைத்து வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.