July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இன முரண்பாட்டை ஏற்படுத்த வெளிநாடுகள் முயற்சிப்பதாக இராணுவத் தளபதி சாடல்

Shavendra-Silva-

புலம்பெயர் அமைப்புகளின் பணம் காரணமாக இலங்கை இராணுவத்தை சிலர் குற்றம்சாட்டி வருவதாகவும், வெளிநாடுகள் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் போர்க் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் விதமாக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாகவும், தாம் முன்னெடுத்த மனிதாபிமான யுத்தம் குறித்த விதிமுறைகளை எவரும் கற்பித்துத் தரவேண்டிய அவசியம் இல்லை எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

பொய்யான சாட்சியங்களை உருவாக்கி, இராணுவத்தை அவமதிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் அமைதியை சீர்குலைப்பதற்கான முயற்சிகளே இன்று மனித உரிமைகள் பேரவையில் வெளிப்படுகின்றதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.