June 15, 2025 20:29:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாடும் தேசமும் உலகமும் அவளே’: மகளிர் தின நிகழ்வுகள்

‘நாடும் தேசமும் உலகமும் அவளே’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது யாழ். மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்

இதேவேளை மன்னாரிலும் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

மன்னார் நகர சபை உறுப்பினர் சி. அந்தோனியம்மா தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல், உள்ளூராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும், மாவட்டத்தில் பெண்களுக்கான முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், பெண் பிரதிநிதிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்குகொண்டு வந்தனர்.

இதனையடுத்து  உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரச அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

வவுனியா

இதேநேரம் வவுனியா நகரசபை மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு சர்வதேச மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ரத்தினகுலம் தலைமையில் இடம்பெற்றது.