June 12, 2025 7:57:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். செம்மணி மயானத்தில் பொதியொன்றில் இருந்து வெடிமருந்து மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் பொதியொன்றில் ஆபாத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானப் பகுதியில் சோதனை நடத்திய அதிரடிப்படையினர் அங்கு பையொன்றில் வெடி மருந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதில் உள்ள வெடி மருந்து ஆபத்தானது என தெரிவித்துள்ள விசேட அதிரடிப்படையினர் அங்கு மேலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனை அங்கு கொண்டுவந்து போட்டவர்கள் தொடர்பாக பொலிஸாரும் அதிரடிப்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.