July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் தின நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணித் தலைவி சிறிகாந்தன் கலைவாணி தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், எஸ். சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, கட்சியின் கொடியை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் ஏற்றிவைத்ததுடன் அன்னை பூபதிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, விளக்கேற்றப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

This slideshow requires JavaScript.