July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரணைதீவு ஜனாஸா அடக்கத்திற்கு எதிராக யாழ். கத்தோலிக்க தேவாலயங்களில் ஆர்ப்பாட்டம்

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தய வண்ணம் இந்த  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது “கத்தோலிக்க மக்கள் வாழும் இரணைதீவில் கொவிட்-19 நோயால் உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்ய அரசு எடுத்த தீர்மானத்தை கைவிடவேண்டும்.

“எமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முஸ்லிம் மக்களுக்கானது அல்ல, இஸ்லாமியரும் கத்தோலிக்கர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்”

என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ‘எம் வாழ்விடத்தை சவக்காலை ஆக்காதே!, இரணைதீவு மக்களின் நல்வாழ்வை சிதைக்காதே!, மத நல்லிணக்கத்தை சிதைக்காதே! போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

This slideshow requires JavaScript.