July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையின் எல்லை பாதுகாப்பில் இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம்’

இலங்கையின் எல்லை பாதுகாப்பில் இந்தியாவின் ஒத்துழைப்புகளை கட்டாயம் பெற்றாக வேண்டும்,கடல் எல்லை பாதுகாப்பில் இந்தியாவே பிரதானமானதாகும் என விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்தார்.

இலங்கையின் பிராந்திய நாடுகளாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பசுபிக் எல்லையில் பலமான அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புக்கள் எமக்கு கிடைத்து வருகின்றது. எனினும் இலங்கையின் எல்லையை பாதுகாக்க வேண்டுமானால் இந்தியாவுடன் இணைந்தே செயற்பட வேண்டும்.

அவுஸ்திரேலியாவும் கடல் எல்லை பாதுகாப்பில் எம்முடன் இணைந்து செயற்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

இப்போது வரையில் கபீர் (kafir)விமானம் ஒன்றே எம்மிடம் உள்ளது என தெரிவித்த தளபதி, மேலும் ஐந்து கபீர் விமானங்களை இஸ்ரேல் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளவுள்ளோம். பாவனையில் உள்ள விமானங்களையே நாம் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.

அதேபோல் இம்முறை இந்தியாவின் விமானப்படைகளும் எம்முடன் இணைந்து நிகழ்வுகளில் கலந்துகொள்ள அரசியல் நோக்கங்கள் எதுவும் இல்லை, இது வழமையான ஒன்றாகும். நட்பு நாடுகளுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடுகின்றோம்.பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் சில நாடுகளுடன் நாம் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடுகின்றோம். அவ்வாறு இருக்கையில் எம்மை கௌரவிக்கும் விதமாகவும், நட்புறவை மேலும் பலப்படுத்தும் விதமாகவுமே இந்த செயற்பாடுகளை கருத வேண்டும் என்றார்.