May 31, 2025 4:30:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக கொழும்பு ஐநா அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு ஐநா அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழந்த மற்றும் காணாமல்போனவர்களின் பெற்றோர்களின் முன்னணி இந்த ஆர்ப்பாடத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஐநா அலுவலகம், பிரிட்டன் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் மகஜர்களையும் கையளித்துள்ளனர்.

இலங்கை யுத்தத்தின் போது காணாமல்போன பொது மக்கள் மற்றும் படை வீரர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஐநா ஆணையாளரின் அறிக்கை பக்கச்சார்பானது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் பிரிட்டன் பிரதிநிதிகள் தேடிப் பார்க்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.