June 16, 2025 20:12:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாயின் முடிவால் விபரீதம்; கிளிநொச்சியில் சோகம்

தனது மூன்று பிள்ளைகளுடன் தாய் ஒருவர் கிணற்றில் குதித்துள்ள சம்பவம் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பிரதேசத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் தாய் உயிர்தப்பிய போதிலும் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துவிட்டன.

குறித்த பெண், பிள்ளைகள் மூவரையும் கிணற்றுக்கு அழைத்துச்சென்று அவர்களை அணைத்தபடியே கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

அயலவர்களின் உதவியுடன் குறித்த பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரது மூன்று பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதன்போது 8, 5, 2 வயதுகள் நிரம்பிய ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண் பிள்ளைகளுமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.